Coincidencias para "rsumathi"

  • Más vendido
  • Valoración más alta
  • Precio: de menor a mayor
  • Título: A a Z
  • Título: Z a A
  • Fecha: de más reciente a más antiguo
  • Fecha: de más antiguo a más reciente
Eliminar todo

Mostrando 1 - 12 de 66 resultados

El contenido para adultos es visible. 

2023

EN

மறுநாளும் இதே கதைதான் நடந்தது.'ஒவ்வொரு மனிதனையும் ஒரு வித ஒளி சூழ்ந்து நிற்கிறது.அவன் எதைத் தொட்டாலும், அவனுடைய இயல்பின் ஒரு கூறு, அதாவது அவனுடைய குணம் அந்தப் பொருளில் பதிகிறது. ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் அவனது குணம் ஒரு பௌதிக சக்தி போல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.'விவேகானந்தரின் இந்தக் கூற்றை அடிக்கடி அவளுடைய எம்.டி. மகேந்திரன் சொல்லிச் சொல்லிச் சம்யுக்தாவைப் பாராட்டுவார்."சம்யுக்தா... உன்கிட்ட கொடுக்கற ஒவ்வொரு வேலையிலும் உன் குணம் பிரதிபலிக்குதும்மா! உன்னோட ...

2023

TA

அடுத்த அரைமணி நேரத்தில் தன் அறையிலிருந்து வெளிப்பட்ட ராதாகிருஷ்ணனைப் பார்த்து விழிகளை விரித்தான் பூபதி."டேய்... மச்சான்... மாப்பிள்ளை மாதிரி ஜம்முன்னு இருக்கேடா இந்த டிரஸ்ல.""கல்யாணம் என் தங்கச்சிக்கு. விட்டா... எனக்கும் ஒரு பொண்ணு பார்த்து கட்டிவச்சுடுவே போலிருக்கே" என்று மேஜை மீது கிடந்த பேனாவை எடுத்து ஸ்டைலாக சட்டைப் பையில் செருகிக் கொண்டான்."டேய்... பொண்ணு எதுக்குடா பார்க்கணும். அதான் சுவேதா இருக்காளே! உன் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சதும் அதே மேடையில்வச்சு உன் கல்யாணத...

2023

TA

மதிவாணன் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நளினியைப் பார்த்தான்.நளினி தன் கேபினை விட்டு வெளியே வந்து ப்ரியாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.நளினி பேரழகி இல்லைதான். ஆனாலும் சந்தானம் சொன்னதைப் போல் காதலிக்க ஏற்றவள்.அலை அலையான கூந்தல். களையான முகம்.'இருண்ட பருவ முகில்சுருண்டு சுழி எறியும்கொண்டையாள் - குழைஏறி ஆடி நெஞ்சைச்சூறை ஆடும் விழிக்கெண்டையாள்'பள்ளிப் பருவத்தில் படித்த குற்றாலக் குறவஞ்சிப் பாடல் இந்தப் பருவ எழிலைப...

2024

TA

கண்ணீருடன் நின்ற மருமகளைப் பார்த்துக் கொஞ்சமும் மனதில் இரக்கம் இன்றிப் பேசினாள் செல்வநாயகி."என்னடி... முறைச்சுக்கிட்டு நிக்கறே. கண்ணீர் பொத்துக்கிட்டு கொட்டுது. போடி... போய் வேலையைப் பாரு. நல்ல மாட்டுக்குத்தான் ரோஷம் வரணும். உனக்கெல்லாம் எதுக்கு ரோஷம் வரப்போகுது. கல்யாணம் ஆகிப் பத்து வருஷம் ஆகப்போகுது. இருபது வயசுல கல்யாணம். வயசு முப்பது ஆகுது. மாடு மாதிரி நிக்கறே. புண்ணியம் இல்லை."குபீரென நெஞ்சம் குலுங்கக் கதறினாள் வள்ளி. சமையலறையை விட்டு வெளியே வந்தாள். முந்தானையை வாயில் பொ...

2024

TA

மதனவள்ளியின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. கணேஷை இன்றைக்கு எப்படியாவது பார்த்தே தீரவேண்டும் போல் இருந்தது. பார்க்காவிட்டால் இரவு நிச்சயம் உறக்கம் வராது.தன் மனத் தவிப்பையெல்லாம் கஸ்தூரியிடம் காட்டிக் கொள்ளாமல் நடந்தாள். நடக்க முடியாமல் நின்ற ஆட்டுக்குட்டியை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள். மனதின் ஏக்கம் அப்பொழுதும் அவளை விட்டு செல்லவில்லை. கையிலிருக்கும் ஆட்டுக் குட்டி கணேஷாக மாறக் கூடாதா என்று விசித்திரமானதொரு எண்ணம் உண்டானது."ப்ச்! இதெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூ...

2023

TA

மதுரா! ஆத்மஜாவின் கல்லூரித் தோழி...மதுரா அறைக்குள் நுழையும் போது ஆத்மஜா தனக்குத்தானே சிரித்துக் கொண் டிருப்பதைப் பார்த்தாள்."தனியா ரூம்ல எதுக்காக சிரிச்சே?""இன்னைக்கு எங்க அப்பாவோட கல்யாண நாள்... அப்பா ஸ்கூலுக்குப் போய்ட்டு இன்னும் வீட்டுக்கு வரலை. வழக்கம்போல அம்மா... அப்பாவை அர்ச்சனை பண்ணிட்டு இருந்தாங்க. நானும் சேர்ந்து அப்பாவைத் திட்டுற மாதிரி நடிச்சேன்...""அதுக்கு உங்க அம்மா என்ன சொன்னாங்க?""எங்கம்மாதானே! எங்கம்மா அப்பாவைத் திட்டுவாங்க. ஆனா நான் ஒண்ணு...

2023

TA

திலகவதி அதிர்ச்சி நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.அந்தப் பெண் அவன் நெஞ்சில் பலமாய் அமர்ந்து கொண்டு முகத்தில் பத்ரகாளியின் கோபத்தை சுமந்து கொண்டு விரல்களை இரும்பாக்கி நெரித்தாள். கூடவே சத்தமாக கத்தினாள்."வெறி புடிச்ச நாயே... ஒழிடா. பொம்பளைங்க வாழ்க்கையை கெடுக்கிறதுக்குன்னே அலையறீங்களாடா... பன்னிப் பயலே..."கொலைவெறி அவளின் கண்களில் மின்ன அவனை நெரித்து கொண்டிருந்தவள் சட்டென அவனை விட்டாள். அவனை இப்படியும் அப்படியுமாகப் புரட்டினாள். மூக்கில் கை வைத்து பார்த்தாள...

2024

TA

"யார்கிட்டே பேசிக் கொண்டிருக்கே?" அருகே வந்து சம்பத் கேட்கவும் சட்டென்று செல்லை அணைத்துவிட்டு எழுந்தாள் மதுராணி."என் ராஜாகிட்டே பேசிக்கிட்டிருந்தேன்!""ராஜா உன் கணவரோட பெயரா?""இல்லை அவர் பேர் சுரேந்தர். அவரை நான் ராஜான்னு செல்லமா கூப்பிடுவேன்" வெட்கமாக அவள் சிரிக்க சம்பத் சில நிமிடங்கள் மவுனமாக நடந்தான்.கணவனை செல்லமாக ராஜா என்று அழைக்கிறாள் கொடுத்து வைத்தவன். பொறாமை போலொரு உணர்வு மெல்லிய இழையாக நெஞ்சில் கீறியது."பக்கத்திலேயே ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு. அங்க ...

2024

TA

மாப்பிள்ளையின் தாய் ஆடு திருடிய கள்ளியைப் போல் விழித்தாள். செய்தியைக் காதோடு காதாக தன்னோடு வந்திருந்தவர்களுக்கும் பரப்பினாள். தொடர்ந்து அனைவரின் முகமும் இருண்டது. ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.சங்கர மூர்த்திக்கு எதுவோ தவறாகப் பட்டது. மகளை உள்ளே போகச் சொல்லி கண் ஜாடை காட்டினார்.மலர்விழியும் ராதிகாவும் உள்ளே சென்றனர்."பொண்ணைப் பார்த்தீங்க. உங்க அபிப்பிராயத்தை சொன்னா மேற்கொண்டு பேசலாம்" என்று நேரடியாக விஷயத்தைத் தொட்டார்.நேருக்கு நேராக மாப்பிள்ளையின் ...

2023

TA

சிவன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கமான அமைதி மனதை விட்டு நீங்கியதைப் போலிருந்தது. காரணம் - ராணியம்மாள் காலையில் நடந்து கொண்ட விதம்தான்.லெட்சுமியும், கண்ணையனும் மீண்டும் மீண்டும் அவளது மனதை ஆக்கிரமித்த வண்ணமே இருந்தனர்.லெட்சுமி இல்லாத இடம் களை இழந்து போனதைப் போலானது. அதிலும் அபர்ணாவும், சோழனும் வெளியே சென்றபின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது.கோவிலுக்குப் போய்விட்டு வந்த மாமியாரும் காலை நீட்டிப் படுத்துவிட்டாள். லெட்சுமி போய்விட்டதால் வேலைகளும் அப்படி அப்படியே கிட...

2023

TA

குதூகலத்தில் இருந்த சுவேதா குழப்பத்திற்கு மாறிவிட்டாள். அம்மா ஆனந்தத்துடன் சொன்ன விஷயம் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது. வீட்டில் பெண் பார்க்க வருகிறார்கள். ஐந்து மணிக்கு சக்தியை சந்திப்பதாக வாக்குக் கொடுத்து விட்டு அவனை எப்படி ஏமாற்ற முடியும்?மனதில் ஒருவனை மணவாளனாக வரித்துக் கொண்டபின் இன்னொருவன் எதிரில் போய் எதற்காக நிற்க வேண்டும்? இந்தப் பெண் பார்க்கும் படலம் எதற்கு? போகாமல் இருந்துவிட்டால்? சக்தியை சந்தித்து எப்பொழுதும் போல் பேசிக் கொண்டிருந்து விட்டால்?அம்மா அப்பா என்னை எதிர்...

2023

TA

இந்த உலகில் விதி தரும் துன்பங்களை விட பிறரின் குத்தல் பேச்சு தரும் துன்பம் மிகவும் கொடுமையானது. விதி தரும் துன்பம் கழுத்தை நெரித்து கொல்வதைப் போல் சட்டென நிகழ்ந்து மறைந்து விடும். குத்தல் பேச்சு சீழ்ப்பிடித்த சிரங்கில் ஊசியை ஆழமாய் இறக்கி எடுப்பதைப் போன்ற வலியைத் தரும்.அந்த வலியை இந்த நிமிடம் மிதிலா அனுபவித்தாள். அவளின் பாதங்கள் கல்லூரியின் புல்வெளியில் நோக்கமின்றி நடந்தது. முகத்தில் சோகம் அலையலையாய் பொங்கியது. விழிகள் எதிரே தென்படும் காட்சியை மறைத்தது. புல்வெளியை ஒட்டியிருந்த பூங்க...